செய்திகள்
ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
சூலூர்-சோமனூர் இடையே அருகம்பாளையத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக இன்று காலை போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் சட்டைப்பையில் போத்தனூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக டிக்கெட் இருந்தது. இவர் ரெயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.