செய்திகள்

காரமடையில் இன்று காலை ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2018-12-23 12:26 GMT   |   Update On 2018-12-23 12:26 GMT
காரமடையில் இன்று காலை ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை காரமடை சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40).

இன்று காலை காரமடை- மேட்டுப்பாளையம் இடையே உள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ராஜேஷ் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலயே பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், ஏட்டு பரமேஷ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News