செய்திகள்

தி.மு.க.வினர் பேனர் வைக்க கூடாது- முக ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2018-12-20 04:36 GMT   |   Update On 2018-12-20 04:36 GMT
பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #BanOnBanners
சென்னை:

தமிழகம் முழுவதும் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


பேனருக்கு தடை வரவேற்கத்தக்க ஒன்று. பொது மக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக் கூடாது என நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.

ஆனாலும் சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன். அதனை தி.மு.க. வினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DMK #MKStalin #BanOnBanners
Tags:    

Similar News