செய்திகள்

அறந்தாங்கியில் பன்றிகாய்ச்சலுக்கு பெண் பலி

Published On 2018-12-15 14:35 GMT   |   Update On 2018-12-15 14:35 GMT
அறந்தாங்கியில் பன்றிகாய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். #swineflu
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்தி பூங்கா சாலை பகுதியை சேர்ந்த கண்ணன் மனைவி அமுதா (வயது 38). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி  அமுதா இறந்தார். 

பன்றி காய்ச்சலால் அவர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே காய்ச்சல் பரவுவதை தடுக்க  சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். #swineflu
Tags:    

Similar News