செய்திகள்
வேலூர் - அரக்கோணத்தில் காதல் தோல்வியால் மாணவி, வாலிபர் தற்கொலை
வேலூரில் காதல் தோல்வியால் நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அரக்கோணம் அருகே ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:
வேலூர் சங்கரன் பாளையத்தை சேர்ந்த குணசீலன் மகள் லாவண்யா (21). இவர் வேலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
அவரது உறவினரான வாலிபரை காதலித்து வந்தார். காதலுக்கு வாலிபரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த லாவண்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.
உடல் கருகிய அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பாகாயம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவரது மகன் பாலாஜி (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.இவர் அவரது உறவினர் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாலாஜி நேற்று உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது வீட்டில் பெண் கேட்க சென்றுள்ளார்.
அதற்கு பெண்ணின் தந்தை பெண்ணை தர விருப்பம் இல்லையென்று கூறி அனுப்பி உள்ளார். இதனால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினார். மனமுடைந்த பாலாஜி வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை தீயில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாலாஜி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தக்கோலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வேலூர் சங்கரன் பாளையத்தை சேர்ந்த குணசீலன் மகள் லாவண்யா (21). இவர் வேலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
அவரது உறவினரான வாலிபரை காதலித்து வந்தார். காதலுக்கு வாலிபரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த லாவண்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார்.
உடல் கருகிய அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பாகாயம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவரது மகன் பாலாஜி (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.இவர் அவரது உறவினர் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாலாஜி நேற்று உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது வீட்டில் பெண் கேட்க சென்றுள்ளார்.
அதற்கு பெண்ணின் தந்தை பெண்ணை தர விருப்பம் இல்லையென்று கூறி அனுப்பி உள்ளார். இதனால் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினார். மனமுடைந்த பாலாஜி வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை தீயில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாலாஜி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தக்கோலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews