செய்திகள்

ஆரணியில் விநாயகர் கோவில் உண்டியல் திருட்டு

Published On 2018-12-15 10:12 GMT   |   Update On 2018-12-15 10:12 GMT
ஆரணியில் விநாயகர் கோவில் உண்டியல் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி:

ஆரணி பாச்சா உடையார் தெருவில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு கோவில் வாளாகத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு கோவில் பூசாரி சுப்பிரமணியம் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டிச் சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பூசாரி சுப்பிரமணியம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News