செய்திகள்

திருமங்கலம் அருகே வி‌ஷவண்டு கொட்டியதால் 25 பேர் பாதிப்பு

Published On 2018-12-14 14:35 GMT   |   Update On 2018-12-14 14:35 GMT
திருமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் வேலை பார்த்த 25 பேரை வி‌ஷவண்டு கொட்டியது. இதில் 25 பேரும் காயம் அடைந்தனர்.

பேரையூர்:

திருமங்கலம் அருகேயுள்ள பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(45). இவருடைய தோட்டத்தில் 25-க்கும் மேற்பட்டோர் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மரத்திலிருந்த 1000-க்கும் மேற்பட்ட வி‌ஷ வண்டுகள் பறந்து வந்து விவசாய பணியில் ஈடுபட்டவர்களை கொட்டியது. இதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தோட்டத்தின் உரிமையாளர் கிருஷ்ணன் அவருடைய மகன் ஸ்ரீ வேலன் மற்றும் பொன்னுத்தாய், சாந்தி ஆகியோரின் உடலில் வி‌ஷ வண்டுகளின் கொடுக்குகள் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News