செய்திகள்

தருமபுரி அருகே 3 பொண்டாட்டிகாரர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

Published On 2018-12-14 12:34 GMT   |   Update On 2018-12-14 12:34 GMT
தருமபுரி அருகே குடும்ப தகராறில் 3 பொண்டாட்டிகாரர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:

தருமபுரியை அடுத்துள்ள வேப்பிலைப்பட்டி செங்கான் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது50). லாரி டிரைவரான இவருக்கு 3 மனைவிகள் உள்ளன. முதல் மனைவி கோவிந்தம்மாள், மகாலட்சுமி, அம்பிகா. இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளன. முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வீட்டில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் கணவன்-மணைவிகளுக்கு இடையே தகராறு நடந்தது. 

இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு கடத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக முருகன் உயிரிழந்தார்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News