செய்திகள்
கல்லிடைக்குறிச்சியில் இளம்பெண் திடீர் மாயம்
கல்லிடைக்குறிச்சியில் இளம்பெண் திடீரென மாயமானர். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண் தேடி வருகிறார்கள்.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சி தெற்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் அசன் மைதீன். இவரது மகள் ஆமீனா (வயது21). இவர் நெல்லையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு வந்த ஆமீனா வேலைக்கும் செல்ல வில்லை. மாலையில் வீடு திரும்பவும் இல்லை. இதனால் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடினார்கள். அங்கும் ஆமீனாவை பற்றி தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நேற்று ஆமீனாவின் தாயார் உம்மு சுலைகா, கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆமீனாவை தேடி வருகிறார்கள்.