செய்திகள்

வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்த வாலிபர் கைது- சொகுசு கார் பறிமுதல்

Published On 2018-12-06 12:31 GMT   |   Update On 2018-12-06 12:31 GMT
ராஜபாளையம் வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்த வாலிபரை கைது செய்த போலீசார் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
கோவை:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). பருத்தி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் உடுமலை அருகே உள்ள இலுவன்காட்டூரை சேர்ந்த ஷேக்அப்துல்காதர் (37) என்பவர் பருத்தி வாங்கிய வகையில் ரூ.1 கோடியே 93 லட்சத்து 47 ஆயிரத்து 607 பாக்கி வைத்துள்ளார். இந்த தொகையை கேட்ட போது, ஷேக்அப்துல் காதர் தான் புதிதாக மில் வாங்குவதாகவும், மில்லை வாங்கிய பின்னர் பணத்தை மொத்தமாக கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார்.

அதோடு, மில் வாங்குவதற்கு பணம் தேவைப்படுதாக கூறி சீனிவாசனிடம் பணம் கேட்டார். இதை நம்பிய சீனிவாசன் மேலும் ரூ.1 கோடியே 17 லட்சத்தை கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 60-ஐ வாங்கிய ஷேக் அப்துல் காதர் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து சீனிவாசன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஷேக்அப்துல் காதர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் விசாரணை நடத்தி ஷேக்அப்துல்காதரை கைது செய்தார். அவரிடம் இருந்து சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான ஷேக்அப்துல் காதர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும், இரிடியம் மோசடி கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News