செய்திகள்

வேதாரண்யம் அருகே குழந்தையுடன் பெண் மாயம்

Published On 2018-12-04 11:36 GMT   |   Update On 2018-12-04 11:36 GMT
வேதாரண்யம் அருகே குழந்தையுடன் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியில் வசிப்பவர் ஐயப்பன் (வயது 35). சேலத்தை சேர்ந்தவர். நெல் அறுவடை செய்யும் எந்திரத்தை வேலை பார்த்துக் கொண்டு இந்த பகுதிக்கு வந்தபோது கோடியக் காட்டை சேர்ந்த கானேஸ்வரி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவருக்கு தினேஷ் (7) என்ற மகனும், யாழினி (3) என்ற மகளும் உள்ளனர். ஐயப்பன் தற்சமயம் ஆந்திராவில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று கோடியக்காடு வந்து பார்த்தபோது கானேஸ்வரி மகள் யாழினியுடன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News