செய்திகள்
விசாரணை ஆணையத்தில் இன்று தோல் டாக்டர்கள் முரளிதர், ராஜகோபால்- பார்வதி பத்மநாபன் ஆகியோர் ஆஜராக வந்த காட்சி.

ஜெயலலிதா மரண விசாரணை- அப்பல்லோ டாக்டர்கள் ஆஜர்

Published On 2018-12-04 07:31 GMT   |   Update On 2018-12-04 07:31 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். #JayaDeathProbe #ArumugasamyInquiryCommission
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

இந்த விசாரணைக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் முரளிதர், ராஜ கோபால், பார்வதி பத்மநாபன் ஆகியோரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.


இருவரும் தோல் சிகிச்சை நிபுணர்கள் ஆவார்கள். இன்று காலை 10.30 மணியளவில் விசாரணை ஆணையத்துக்கு இருவரும் வந்தனர்.

நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் அவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் பற்றி தெரிவித்தனர்.

2 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. #JayaDeathProbe #ArumugasamyInquiryCommission
Tags:    

Similar News