செய்திகள்
ஒரத்தநாட்டில் 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர் கைது
ஒரத்தநாட்டில் 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் செயல்படும் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது பற்றி மாணவியின் தந்தை ஒரத்தநாடு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (20) என்ற வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது தெரியவந்தது.
அவரை நேற்று இரவு 11 மணி அளவில் போலீசார் கைது செய்து மாணவியை மீட்டனர். பின்னர் அவர் மாணவியை பலாத்காரம் செய்தாரா? என்பதை தெரிந்து கொள்ள அவரை இன்று மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் ஒரத்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரத்தநாடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் செயல்படும் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார்.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது பற்றி மாணவியின் தந்தை ஒரத்தநாடு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (20) என்ற வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றது தெரியவந்தது.
அவரை நேற்று இரவு 11 மணி அளவில் போலீசார் கைது செய்து மாணவியை மீட்டனர். பின்னர் அவர் மாணவியை பலாத்காரம் செய்தாரா? என்பதை தெரிந்து கொள்ள அவரை இன்று மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் ஒரத்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.