செய்திகள்

உடுமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2018-12-02 17:37 GMT   |   Update On 2018-12-02 17:37 GMT
உடுமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து அமராவதி நகர், சாயப்பட்டறை உட்பட பல கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட கிடையாது. குறிப்பாக பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டை கூட ஊராட்சி நிர்வாகத்தினர் வீட்டு மனைகளாக மாற்றி விட்டனர். இதனால் சுடுகாட்டிற்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ள சுடுகாட்டை மீட்டு தர வேண்டும், குடிநீர் பிரச்சனை, இலவச வீட்டுமனை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை தாசில்தார் அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் வருவாய் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் தாசில்தார் தங்கவேலுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மூர்த்தி, பால் நாராயணணன் வக்கீல் சாதிக்பாட்ஷா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News