செய்திகள்
காரமடை அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை காரமடை அருகே உள்ள அம்சாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் நித்யா (வயது 22). இவர் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த வாலிபர் திருமண செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த நித்யா வாழ்க்கையில் விரக்தி அடைந்து அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து நித்யாவின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.