செய்திகள்

குற்றாலம் அருகே கணவர் இறந்ததால் புதுப்பெண் தற்கொலை

Published On 2018-11-29 13:40 GMT   |   Update On 2018-11-29 13:40 GMT
குற்றாலம் அருகே திருமணமான ஒரு மாதத்தில் கணவர் இறந்ததால் மன வேதனை அடைந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் பரமேஸ்வரி(வயது23). இவருக்கும் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சாரங்கராஜ் என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் பாவூர்சத்திரத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி சாரங்கராஜ் மின்சாரம் தாக்கி இறந்தார். இதனால் பரமேஸ்வரி மிகுந்த மன வேதனை அடைந்தார். தனது கணவரை நினைத்து அழுதபடி இருந்த அவர் தாய் வீடான ஆயிரப்பேரிக்கு வந்தார். அங்கு அவரது பெற்றோரும், சகோதரரும் பரமேஸ்வரிக்கு ஆறுதல் கூறினர். எனினும் தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று பரமேஸ்வரி யாரிடமும் சரியாக பேசாமல் விரக்தியில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று பரமேஸ்வரி தனது அறையில்  தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News