செய்திகள்

செய்துங்கநல்லூரில் வாட்ஸ்-அப்பில் அவதூறு தகவல் பரப்பிய வாலிபர் கைது

Published On 2018-11-27 14:11 GMT   |   Update On 2018-11-27 14:11 GMT
செய்துங்கநல்லூர் அருகே வாட்ஸ்-அப்பில் அவதூறு தகவல் பரப்பியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செய்துங்கநல்லூர்:

செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில் பத்து பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கோட்டை என்ற சுந்தரம் (வயது 19). இவர் வாட்ஸ்-அப்பில் சாதியை திட்டி அவதூறான தகவல் பரப்பியுள்ளார். இந்த தகவல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் கிராம அதிகாரி பாண்டிபெருமாள் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் வழக்கு பதிவு செய்து கோட்டை என்ற சுந்தரத்தினை கைது செய்தனர். கைதான சுந்தரம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். #tamilnews
Tags:    

Similar News