செய்திகள்
கஜா புயல் சேதம் - அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி
கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ருபாய் வழங்கியுள்ளது. GajaCyclone #GajaCycloneRelief #AIADMK
சென்னை:
தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார். இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.
இதற்கிடையே, கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
கஜா புயல் நிவாரணத்திற்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி ரூபாய்க்கான நிதியை முதலமைச்சர் பழனிசாமியிடம், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று வழங்கினார்.
இதேபோல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜெயலலிதா பேரவை சார்பில் ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமியிடம் அமைச்சர் உதயகுமார் இன்று வழங்கினார். #GajaCyclone #GajaCycloneRelief #AIADMK