செய்திகள்

கஜா புயலால் நவ.16-ல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் டிச.9-ல் நடைபெறும் - பதிவாளர்

Published On 2018-11-27 10:36 GMT   |   Update On 2018-11-27 10:36 GMT
கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnamalaiUniversity #Exams
சிதம்பரம்:

கஜா புயல் கடந்த 16-ம் தேதி வேதாரண்யம், நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இதனால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன.

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அன்று நடைபெறுவதாக இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்திருந்தார்.



இந்நிலையில், கஜா புயலால் நவம்பர் 16-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் இன்று அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnamalaiUniversity #Exams
Tags:    

Similar News