செய்திகள்
திருவொற்றியூரில் பெண் வியாபாரியிடம் ரூ.40 ஆயிரம் திருட்டு
திருவொற்றியூரில் பெண் வியாபாரியிடம் ரூ.40 ஆயிரம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு அவர் மார்க்கெட் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சுருக்கு பையில் வைத்திருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி விசாரணை நடத்தி வருகிறார்.