செய்திகள்

முத்துப்பேட்டை அருகே மயங்கி விழுந்து வாலிபர் பலி

Published On 2018-11-24 08:51 GMT   |   Update On 2018-11-24 08:51 GMT
முத்துப்பேட்டை அருகே மயங்கி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் வடகாடு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மதன் (வயது 25). கூலித்தொழிலாளி. இந்தநிலையில் கஜா புயலால் மதனின் வீடு முற்றிலும் சேதமானது. இதனால் அவர் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்கி வந்தார்.

நேற்று முகாமில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News