செய்திகள்

மானாமதுரையில் தொடர் மழையால் குண்டும் குழியுமான சாலை

Published On 2018-11-23 10:17 GMT   |   Update On 2018-11-23 10:17 GMT
கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

மானாமதுரை:

கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

மழை காரணமாக மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதேபோல் பள்ளி கட்டிடங்களிலும் மழைநீர் இறங்கி ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. மழையால் சிவகங்கை, வேம்பத்தூர் சாலையும் சிதைந்து கிடக்கிறது.

சுற்றிலும் பள்ளி சுற்றுச்சுவரை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. பள்ளியில் தேங்கிய மழைநீரை உடனே வெளியேற்றுவதுடன் ஈரப்பதத்துடன் உள்ள கட்டிடங்களை தொடர்ந்து பயன்படுத்தலாமா? என ஆய்வு செய்ய வேண்டும். வேம்பத்தூரில் இருந்து பச்சேரி வரை புதிய சாலை அமைக்க வேண்டும் என வேம்பத்தூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News