செய்திகள்

புயல் நிவாரண பொருட்களை பஸ்களில் இலவசமாக எடுத்து செல்ல அனுமதி - அமைச்சர் அறிவிப்பு

Published On 2018-11-20 07:58 GMT   |   Update On 2018-11-20 08:05 GMT
புயல் நிவாரண பொருட்களை பஸ்களில் இலவசமாக எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GajaStorm #Minister

சென்னை:

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 15-ந்தேதி அன்று ‘‘கஜா’’ புயலால் தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.

 


முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான பொருட்களை தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நிவாரண பொருட்களை எடுத்துச் செல்ல உரிய உதவிகளை செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaStorm #Minister

Tags:    

Similar News