செய்திகள்
தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
தருமபுரி:
சேலம் மாவட்டம் ஒமலூர் அடுத்துள்ள தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் மணிகண்டன் (வயது21), கல்லூரி படிப்பு முடித்துவிட்டு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் தேன்மொழி (20). கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகிறார். ஒரே பகுதி என்பதால் மணிகண்டனுக்கும் தேன்மொழிக்கும் இடையே பழக்கும் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் இந்த காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை மணிகண்டனும் தேன்மொழியும் தருமபுரிக்கு வந்து திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து தேன்மொழியின் வீட்டார் சேலம் மாவட்டம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த தகவல் மணிகண்டன் மற்றும் தேன்மொழிக்கு தெரியவர தருமபுரி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தனர். இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.