செய்திகள்

புதுக்கோட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published On 2018-11-18 12:13 GMT   |   Update On 2018-11-18 12:32 GMT
நிவாரண பணிகள் இன்னும் நிறைவடையாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
புதுக்கோட்டை:

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத அளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் அதிகளவில் சாய்ந்துள்ளன. அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். #GajaCyclone
Tags:    

Similar News