செய்திகள்

தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மர்ம மரணம்

Published On 2018-11-17 09:48 GMT   |   Update On 2018-11-17 09:48 GMT
தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவகோட்டை:

தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி (வயது 47), ஆட்டோ டிரைவர்.

தேவகோட்டை ராம் நகர் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று காலை காசி வழக்கம் போல் ஆட்டோ ஓட்டச் சென்றார்.

இந்த நிலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள மரத்தில் ஆட்டோ மோதி நின்றதை அந்த வழியே சென்றவர்கள் நேற்று இரவு பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது காசி ரத்தக்காயங்களுடன் கிடந்தார்.

அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், காசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவர் தற்செயல் விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது யாராவது வாக னத்தை மோதி விபத்தை ஏற்படுத்தினார்களா? என்பது மர்மமாக உள்ளது.

விபத்து குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News