செய்திகள்

பூந்தமல்லியில் வியாபாரி மொபட்டில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருட்டு

Published On 2018-11-17 06:29 GMT   |   Update On 2018-11-17 06:28 GMT
பூந்தமல்லியில் வியாபாரி மொபட்டில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி:

பூந்தமல்லி பைபாஸ் ரோட்டில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் கடை வைத்திருப்பவர் தேவராஜ் (வயது 52).

இவர் பூந்தமல்லி டிரெஸ் சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 1 லட்சம் எடுத்தார். அதை நண்பர் ஒருவருக்கு கொடுப்பதற்காக தனது மொபட்டில் சென்றார்.

பணத்தை அந்த மொபட்டின் சீட்டின் கீழே உள்ள அறையில் வைத்திருந்தார். வழியில் ஒரு பெட்டிக்கடை அருகே மொபட்டை விட்டு விட்டு வீட்டுக்கு பொருட்கள் வாங்கினார்.

பின்னர் மொபட் சீட்டை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ. 1 லட்சத்தை யாரோ திருடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, வியாபாரியிடம் பணம் திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள். மொபட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது தேவராஜின் மொபட்டை வேறு ஒரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தொடர்ந்து வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

Similar News