செய்திகள்
தேவதானப்பட்டி அருகே ஆட்டோவை தீ வைத்து எரித்த கும்பல்
தேவதானப்பட்டி அருகே ஆட்டோவை தீ வைத்து எரித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவதானப்பட்டி:
பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 35). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது ஆட்டோவை வீட்டில் நிறுத்தி வைத்து விட்டு தூங்கினார்.
இன்று வீட்டின் முன் தீ எரிந்து கொண்டிருந்துள்ளது. வெளியே கதவு திறந்து பார்த்த போது ஆட்டோ தீ எரிவதை பார்த்து பின்னர் தண்ணீரை வைத்து அணைத்தனர். பின்னர் தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தீ வைத்தது யார் என்று தெரியவில்லை?
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து இப்பகுதியில் ஆட்டோக்களில் டயர், பேட்டரி, டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. இது சம்மந்தமாக தேவதானப்பட்டி விசாரித்து வருகின்றனர்.