செய்திகள்

திருச்சியில் 6 பேரின் வங்கி கணக்கை பெற்று கடன் மோசடி- வாலிபர் கைது

Published On 2018-11-16 14:16 GMT   |   Update On 2018-11-16 14:16 GMT
திருச்சியில் 6 பேரின் வங்கி கணக்கை பெற்று கடன் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:

திருச்சி ஒத்தக்கடை புதுதெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி தரணி (வயது 25). இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது;-

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நாயக்கரை பாளையம் வடக்கு  தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 28)இவர் தனியார் செல்போன் ஷோருமில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் என்னுடைய தனி நபர் அடையாளம், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட  விபரங்களை பெற்றுக் கொண்டார். 

இதேபோல் மேலும் 6 நபர்களிடம் ஆவணங்களை பெற்றுள்ளார். இந்த ஆவணங்கள்அனைத்தும் பயன்படுத்தி ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் நுகர்வோர் கடன் பெற்றுள்ளார். தற்போது அதில் ரூ.3 லட் சத்து 30 ஆயிரம் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் மீதம் உள்ள ரூ.2 லட்சம் பணத்தை திரும்ப செலுத்த வில்லை. அந்த பணத்தை கட்டாமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரிக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

அதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.
Tags:    

Similar News