செய்திகள்

திருப்பத்தூர் அருகே மண் சரிந்து தொழிலாளி பலி

Published On 2018-11-16 15:42 IST   |   Update On 2018-11-16 15:42:00 IST
திருப்பத்தூர் அருகே மண் சரிந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள குருசிலாபட்டு கூடபட்டுகாலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் நேற்று காக்னாம்பாளையம் சுடுகாடு அருகே மணல் அள்ளிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராமல் திடீர் என மணல் சரிந்து ராஜேந்திரன் மீது விழுந்தது. இதில் ராஜேந்திரன் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த குறிசிலாபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News