செய்திகள்

குடியாத்தத்தில் நர்சு தீக்குளித்து தற்கொலை

Published On 2018-11-14 12:56 GMT   |   Update On 2018-11-14 12:56 GMT
குடியாத்தத்தில் குளியலறையில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்த நர்சு பரிதாபமாக இறந்தார்.

குடியாத்தம்:

குடியாத்தம் நல்லூர் பேட்டை புத்தர்நகரை சேர்ந்தவர் அருணாசலம் மகள் சுஜிதா (வயது 20). நர்சிங் படித்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த சுஜிதா குளியலறைக்கு சென்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது உடலில் வேகமாக பரவிய தீ பற்றி எரிந்தது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். தீயை அணைத்து சுஜிதாவை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிக்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.குடியாத்தம் டவுன் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து சுஜிதா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News