செய்திகள்

கல்வி உதவித்தொகையில் ஊழல்- ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-11-12 09:42 GMT   |   Update On 2018-11-12 09:42 GMT
கல்வி உதவித்தொகையில் ரூ.17 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலர் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHighCourt
சென்னை:

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் ரூ.17 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலர் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், ‘தமிழக கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடை பெற்றுள்ளதாகவும், தமிழக அரசின் தணிக்கை துறை அறிக்கையின்படி ரூ.17 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்ததது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜ மாணிக்கம் ஆகியோர், மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஆதிதிராவிடர் நலத்துறை செயலருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #ChennaiHighCourt
Tags:    

Similar News