செய்திகள்

கன்னியாகுமரி அருகே போலீஸ்காரர் மனைவி மாயம்

Published On 2018-11-10 13:35 GMT   |   Update On 2018-11-10 13:35 GMT
கன்னியாகுமரி அருகே போலீஸ்காரர் மனைவி மாயமானது குறித்து அவரது மாமியார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தேவிமஞ்சு (வயது 29). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள 9-வது பட்டாலியனில் சுரேஷ் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் சத்தீஷ்கர் மாநில தேர்தல் பணிக்காக சென்று உள்ளார். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி சுரேஷ் போன்மூலம் தனது மனைவியை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை. இதனால் தனது தாயார் வசந்தாவை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறினார். அவர் அங்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. தேவி மஞ்சு மாயமாகி இருந்தார்.

இந்த தகவலை அவர் சுரேசுக்கு தெரிவித்தார். அதன் பிறகு கன்னியாகுமரி போலீசில் வசந்தா இது பற்றி புகார் செய்தார். அந்த புகாரில் மாயமான தனது மருமகள் தேவிமஞ்சுவை கண்டுபிடித்து தரும் படி கூறி இருந்தார். இது பற்றி இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குபதிவு செய்து மாயமான தேவிமஞ்சுவை தேடி வருகிறார்.

Tags:    

Similar News