செய்திகள்

போலீசில் புகார் அளித்ததால் ஸ்டுடியோ அதிபரை குத்தி கொன்ற வாலிபர் கைது

Published On 2018-11-09 17:07 GMT   |   Update On 2018-11-09 17:07 GMT
போலீசில் புகார் அளித்ததால் ஸ்டுடியோ அதிபரை குத்திக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மேலசொக்கநாதபுரம்:

போடி திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வபாண்டியன் (வயது 45). இவர் அதே பகுதியில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இவரது கடை முன்பு கார்த்தீஸ்வரன் (வயது 30) என்பவர் தினந்தோறும் அமர்ந்து குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். இதனால் செல்வபாண்டியனுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் இது குறித்து செல்வபாண்டியன் போலீசிலும் புகார் அளித்தார். போலீசார் கார்த்தீஸ்வரனை சத்தம் போட்டு ஒழுங்காக இருக்குமாறு எச்சரித்துள்ளனர். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

நேற்று இரவு செல்வபாண்டியன் ஸ்டுடியோவில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த கார்த்தீஸ்வரன் வழக்கம் போல் அவரிடம் தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வபாண்டியனை 11 இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனையடுத்துநகர கண்காணிப்பாளர் காயத்திரி, துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் பிரபு ஆகியோர் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான கார்த்தீஸ்வரனின் உருவத்தை வைத்து அவரை தேடி வந்தனர். நள்ளிரவில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News