செய்திகள்

வேலூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2018-11-09 15:07 GMT   |   Update On 2018-11-09 15:07 GMT
பண மதிப்பிழைப்பு நீக்கம் செய்ததால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதை கண்டித்து காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congressdemonstration
வேலூர்:

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாநில பொதுச் செயலாளர் விஜயன் தலைமையில் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாகித்பாஷா, வழக்கறிஞர் அணி தலைவர் கிருஷ்ணகுமார் முன்னாள் மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ரூ.1000 மற்றும் ரூ.500 பண மதிப்பிழைப்பு நீக்கம் செய்ததால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.  #congressdemonstration
Tags:    

Similar News