செய்திகள்

குட்கா ஊழல் வழக்கு - அதிகாரிகள் 2 பேர் ஜாமீன் கோரி மீண்டும் மனு

Published On 2018-11-09 08:47 IST   |   Update On 2018-11-09 08:47:00 IST
குட்கா ஊழல் வழக்கில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். #Gutkhascam
சென்னை:

குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரிய அவர்கள் 6 பேரின் மனுவை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  #Gutkhascam
Tags:    

Similar News