செய்திகள்

ராணிப்பேட்டை அருகே பால் வியாபாரியிடம் ரூ.82 ஆயிரம் திருட்டு

Published On 2018-11-04 11:30 GMT   |   Update On 2018-11-04 11:30 GMT
ராணிப்பேட்டை அருகே பால் வியாபாரியிடம் ரூ. 82 ஆயிரம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாலாஜா:

ராணிப்பேட்டை அடுத்த பொன்னை எஸ்.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). பால் வியாபாரி.

கணேசன் வியாபார தேவைக்காக நேற்று பொன்னையில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.40ஆயிரமும் மற்றோரு தனியார் வங்கியில் ரூ.42 ஆயிரம் எடுத்தார். அந்த பணத்தை ஒரு பையில் வைத்து வங்கி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பைக் பெட்டியில் வைத்தார்.

அப்போது அங்கு வந்த அவரது நண்பரிடம் கணேசன் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். அங்கு பைக்கை நிறுத்தி பெட்டிடையை திறந்து பார்த்தார். அபபோது பொட்டியில் வைத்திருந்த பணப்பை காணமல் போயிருந்தது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணேசன் இது குறித்து பொன்னை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News