செய்திகள்
கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டெருமை
கொடைக்கானலில் நகரப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பெர்ன்ஹில் ரோடு பகுதியில் ஒரு குடியிருப்புக்குள் நுழைந்த காட்டெருமை அங்குள்ள புற்களை மேய்ந்ததோடு மலர்ச்செடிகளையும் மிதித்து நாசம் செய்தது. இந்த ஒரு காட்டெருமை மட்டும் அடிக்கடி இந்த பகுதியில் நுழைந்து பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கொடைக்கானல் வனத்துறையினர் இதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.கொடைக்கானல் வனப்பகுதியில் புல்வெளியை உருவாக்கி வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறாமல் செய்வதில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.