எடப்பாடி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிப்பொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பாப்பாத்தி வழக்கம் போல் தூங்க சென்றார். பின்னர் காலை வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ராதாகிருஷ்ணன் ஜன்னல் வழியாக பார்த்த போது பாப்பாத்தி தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து மனைவி உடலை பார்த்து ராதாகிருஷ்ணன் கதறி அழுதார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உடலை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தேவூர் போலீசார் பாப்பாத்தி உடலை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.