செய்திகள்
ஆலங்குடியில் திமுக சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலங்குடி:
திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலங்குடிசட்ட மன்ற உறுப்பினர் சிவ மெய்ய நாதன் தலைமை வகித்தார்.
மேற்கு ஒன்றியச் செய லாளர் தங்கமணி, நகரச் செயலாளர் பழனிகுமார், ஒன்றிய விவசாய அணி செய லாளர் விஜயன், கவுன்சிலர் மூர்த்தி, கருணாஸ், ஒன்றிய பிரதிநிதி அருளாந்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி சந்தைபேட்டையில் உள்ள தி.மு.க அலுவலகத்திலிருந்து புறப் பட்டு கலைஞர் சாலை, திருவள்ளுவர் சாலை, காந்தி சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. முன்னதாக கட்சி அலுவல கம், வடகாடு முக்கம் பஸ் நிறுத்தம், அரச மரம் பஸ் நிறுத்தம், காமராஜ் சிலை, பேருந்து நிலையம், ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்திருந்த நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. சிவமெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் டெங்கு ஒழிப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய துண்டுச்பிரசுரங் கள் வழங்கியும், இலவச நிலவேம்பு கசாயம் வழங்கியும், முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான தி.மு.க கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.