செய்திகள்

திருப்பத்தூர் அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2018-11-01 13:13 GMT   |   Update On 2018-11-01 13:13 GMT
திருப்பத்தூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள தரியம்பட்டியை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மகன் ரேபக் (வயது 18). கூலித்தொழிலாளி. ரேபக் பூலாங்குறிச்சியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

பழைய காட்டாம்பூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் ரேபக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரேபக்கின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரேபக்கின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.

Tags:    

Similar News