செய்திகள்

மதுரை மத்திய சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை

Published On 2018-11-01 11:27 GMT   |   Update On 2018-11-01 11:27 GMT
மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று ஆயுள் தண்டனை கைதிகள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மதுரை மத்திய சிறையில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இதில் 12-வது கட்டமாக மதுரை சிறையில் இருந்து குமரேசன், கருப்பையா, பெருமாள், சுப்பிரமணியன், பிச்சை, கனி ராஜா, பஞ்சராசு, நடேசன், மாதவன் ஆகிய 8 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதுவரை மதுரை மத்திய சிறையில் இருந்து 221 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News