செய்திகள்

பண்ருட்டி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியை மாயம்

Published On 2018-10-31 16:51 GMT   |   Update On 2018-10-31 16:51 GMT
பண்ருட்டி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியை மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆசிரியையை தேடி வருகிறார்கள்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வடக்கு சாந்திபட்டு பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் வள்ளி (வயது 22).

இவர் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 29-ந் தேதி வள்ளி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மாலையில் பணிமுடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் வள்ளியை பல இடங்களில் தேடினர். எங்கும் காணவில்லை. 

இதனைத் தொடர்ந்து காடாம்புலியூர் போலீசில் தந்தை வடிவேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குபதிவு செய்து மாயமான ஆசிரியையை தேடி வருகிறார்.

Tags:    

Similar News