தமிழ்நாடு செய்திகள்

கூட்டணி என்பது குறித்து முடிவு செய்துவிட்டேன்: பிரேமலதா

Published On 2026-01-09 21:58 IST   |   Update On 2026-01-09 21:58:00 IST
  • இவ்வளவு நாள் சத்ரியனாக வாழ்ந்து விட்டோம்.
  • இனிமேல் சாணக்கியனாக வாழ வேண்டும்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

* கடலூரில் என்றாலே கேப்டன் கோட்டை.

* கேப்டனுக்கு வெற்றி கொடுத்த மாவட்டம்.

* கடலூரில் கேப்டன் இருந்தபோது, மாநாடு நடத்தப்படவில்லை. அவருக்கு வெற்றி தேடிக்கொடுத்த மாவட்டத்தில் நாம் மாநாடு நடத்துகிறோம்.

* கேப்டன் இல்லாமல் நாம் யாரும் கிடையாது.

* தொண்டர்களுடைய பணிக்கு ஈடு இணை கிடையாது. மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானம் மக்களுக்கானவை.

* கேப்டன் பேசிய டயலாக்குதான் உலக பிரசித்தி பெற்றது.

* நான் உங்களில் (தொண்டர்கள்) கேப்டனை பார்க்கிறேன்.

* எப்படி ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர் கேப்டன்.

* கேப்டனுக்கு இணை எந்த தலைவரும் இல்லை. தலைமைக் கழகத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார். புதைக்கப்படவில்லை. தேமுதிக கட்சிக்க இணையான கட்சி ஏதும் இல்லை.

* கேப்டன் என்ற சொல்லுக்கு, அன்புக்கு வந்த தொண்டர்களை இரு கை கூப்பி வணங்குகிறேன்.

* தேமுதிக-வை பற்றி ஏளமாக எந்த கொம்பனாலும் இருந்தாலும் சரி பேசினால், தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள்.

* 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் அமைக்கப்பட்ட நாள்.

* தேர்தல் வந்தால் எவ்வளவு பேரம் பேரம் என்கிறார்கள். நான் பேசுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். அவர்கள் விரல்கள் காட்டுபவர்களுடன்தான் கூட்டணி.

* தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.

* தேமுதிக-விற்கு வெற்றி ஒன்றுதான் கொள்கை.

* யாருடன் கூட்டணி என்ற முடிவை எடுத்தாகிவிட்டது.

* அதை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.

* எந்த கட்சியும் கூட்டணி அறிவிக்கவில்லை. மாவட்ட கழக செயலாளர்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார். தை பிறந்தால் வழி பிறக்கும்.

* இவ்வளவு நாள் சத்ரியனாக வாழ்ந்து விட்டோம். இனிமேல் சாணக்கியனாக வாழ வேண்டும். மற்ற கட்சிகள் அறிவிக்காதது போது, நாம் மட்டும் ஏன் முந்திரி கொட்டையாக முந்த வேண்டும்.

* நமக்கு கண்ணியம் உண்டு. தொண்டர்களை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி.

* தை பிறந்தால் வழி பிறக்கும்.

Tags:    

Similar News