செய்திகள்

ஆம்பூர் அருகே விபத்து - வாலிபர் பலி

Published On 2018-10-31 11:14 GMT   |   Update On 2018-10-31 11:14 GMT
ஆம்பூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜா:

ஆற்காடு அருகே உள்ள உப்புபேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் அர்ஜூனன் (வயது 22). இவர் நேற்று காலை ஆம்பூருக்கு வேலைகாரணமாக சென்று விட்டு மாலை வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு என்ற இடத்தில் பைக் வந்த போது பின்னால் வந்த வேன் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசபட்ட அர்ஜூனன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News