இந்தியா

25 ஆண்டுகளுக்கு பிறகு பிப்.24-ல் தேர்தல் ஆணையர்கள் தேசிய மாநாடு!

Published On 2026-02-04 21:02 IST   |   Update On 2026-02-04 21:02:00 IST
  • இதுபோன்ற கடைசி மாநாடு 1999 இல் நடைபெற்றது.
  • தேசிய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இடையே நிறுவன ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு மாநாடு நடத்தப்பட உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 24 அன்று டெல்லி பாரத் மண்டபத்தில் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாட்டை நடத்த உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் ஆணையர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற கடைசி மாநாடு 1999 இல் நடைபெற்றது.

தற்போது சிறப்பு தீவிர சீர்திருத்த பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தேசிய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இடையே நிறுவன ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News