செய்திகள்
திருச்சி, கரூர், கோவை 6 வழிச்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேணடும்
திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வக்கீல் ராஜூ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் அதன்படி செயலாளர்ராக சிங்காரம், பொருளாளராக வி.கே.ஜி.கந்தசாமி, துணை செயலாளர்களாக நந்தகோபால், சந்திரசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலை காரணமாக லாரி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. எனவே அதன் விலையை குறைக்க மத்திய&மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சுங்கசாவடி கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஆடிட்டர் என்.கே.எம். நல்லசாமி உள்பட லாரி உரிமை யாளர்கள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வக்கீல் ராஜூ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் அதன்படி செயலாளர்ராக சிங்காரம், பொருளாளராக வி.கே.ஜி.கந்தசாமி, துணை செயலாளர்களாக நந்தகோபால், சந்திரசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலை காரணமாக லாரி தொழில் சரிவை நோக்கி செல்கிறது. எனவே அதன் விலையை குறைக்க மத்திய&மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி, கரூர், கோவையை இணைக்கும் வகையிலான ஆறுவழி சாலை பணியை துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சுங்கசாவடி கட்டணத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஆடிட்டர் என்.கே.எம். நல்லசாமி உள்பட லாரி உரிமை யாளர்கள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews