செய்திகள்

வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது - கபிலன் வைரமுத்து

Published On 2018-10-28 23:22 GMT   |   Update On 2018-10-28 23:22 GMT
கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகாருக்கு பதிலளித்துள்ள அவரது மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது என தெரிவித்துள்ளார். #Vairamuthu #MeToo #Chinmayi
சென்னை:

இந்தியா முழுவதும் மீடூ இயக்கம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. பணியிடங்களில் குறிப்பாக சினிமா துறையில் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியான தொல்லைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார்.



இந்த பதிவு சினிமா துறையையே உலுக்கியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைப்பவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக வந்தால் எதிர்கொள்ள தயார் எனவும், வைரமுத்துவின் எழுத்துக்களை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது மற்றும் பாடம் நிறைந்தது என குறிப்பிட்டுள்ளார். #Vairamuthu #MeToo #Chinmayi
Tags:    

Similar News