செய்திகள்

புளியங்குடியில் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2018-10-26 11:36 GMT   |   Update On 2018-10-26 11:36 GMT
புளியங்குடியில் மது அருந்தியதை கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புளியங்குடி:

புளியங்குடி அஞ்சன் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 43). தொழிலாளி. இவரது மகன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகள்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். கணேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அவரது வீட்டில் கண்டித்தனர். சம்பவத்தன்று வழக்கம் போல் கணேசன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மகள்கள் இருவரும் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த கணேசன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News