செய்திகள்
குடிபோதையில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
கீரனூர் அருகே குடிபோதையில் மின்சார டிரான்பார்மரில் ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் அருகே உள்ள மேலப்புதுவயல் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் ஆறுமுகம் (வயது 27). கூலி தொழிலாளி.
இவர் கடந்த 22-ந் தேதி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு நடந்து வந்தார். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மேலப்புதுவயல் செல்லும் வழியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறினார். பின்னர் தனது இரண்டு கைகளால் மின்சாரகம்பியை தொட்டார். உடனே அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
குடிபோதையில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சாரம் பாய்ந்து இறந்த வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.